30 Dec 2016

ரத்தத்தின் ரத்தங்கள்


ரத்தத்தின் ரத்தங்கள்
            அம்மா அவர்களின் மறைவுக்குக் கூட உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்காத ரத்தத்தின் ரத்தங்கள் சின்னம்மாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா அவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது வன்முறையில் இறங்கிய போதுதான் அவர்கள் சின்னம்மா மேல் வைத்துள்ள அக்கறை தெரிய வந்தது.
            சசிகலா புஷ்பாவுக்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் கணவரை வெளுத்து எடுத்து விட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அவரை ரத்தம் சொட்ட சொட்ட காவலர்கள் அழைத்து வந்த காட்சி பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. ரத்தத்தின் ரத்தங்கள் என்பதன் உண்மையான பொருள் அப்போதுதான் புரிய வந்தது.
            அது சரி! சசிகலா புஷ்பா அவர்கள் ஏன் வேட்புமனு தாக்கல் செய்தார்? அவர் பெயரிலும் சசிகலா என்று இருப்பதனாலா?
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...