30 Dec 2016

பத்துக்கு மேல போனா குத்தம்!


பத்துக்கு மேல போனா குத்தம்!
            மார்ச் 2017 - க்குப் பின் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பத்துக்கு மேல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
            பழைய நோட்டுகள் செல்லுபடியான அந்த நாள்களிலே ஒன்றிரண்டு நோட்டுகளுக்கு மேல் கையில் இருந்ததில்லை. இப்போது அந்த செல்லாத நோட்டுகளை பத்துக்கு மேல் வைத்திருப்பது என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை.
            அம்மாவின் மறைவுக்குப் பின் அம்மா படம் இருந்த சட்டைப் பைகளில் சின்னம்மாவின் படம் வந்து விட்டது போல, சட்டைப் பையில் இப்போது இருப்பதெல்லாம் புதிய ரூபாய் நோட்டுதான்.
            பழைய நோட்டுகளை பத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது சரி. புதிய நோட்டுகளும் பத்துக்கு மேல் கையில் இருக்கக் கூடாத அளவுக்கு நிலைமை இருப்பது சரியா? என்பதுதான் சரியா? தவறா? என்று தெரியவில்லை.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...