31 Dec 2016

இந்தப் படை போதுமா?


இந்தப் படை போதுமா?
            சமத்து சம்புலிங்கம் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கராக இருந்தார்.
            பணமாற்ற மதிப்பிற்குப் பிறகு கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது சிரமமாகி விட்டது.
            தலைக்கு ரெண்டாயிரம் தருவதாகச் சொன்னாலும் கூட்டம் சேர்ப்பது பிரம பிரயத்தனமாக இருந்தது.
            இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சமத்து சம்புலிங்கம் ஒரு கட்சிக்காக ரெண்டாயிரம் தொண்டர்களைச் சேர்த்துக் கொடுத்தார்.
            எப்படி இது சம்புலிங்கத்தால் மட்டும் சாத்தியமானது? என்று சகலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது, சம்புலிங்கம் கூலாகச் சொன்னார், "ரெண்டாயிரத்துக்கு சில்லரை தர்றேன்னு சொன்னேன்! அவ்வளவுதான், திரண்டு வந்த கூட்டத்தை என்னாலேயே கன்ட்ரோல் பண்ண முடியல!"
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...