31 Dec 2016

தானா சேர்ந்த கூட்டம் - சம்புலிங்கத்தின் பஞ்ச்


தானா சேர்ந்த கூட்டம் - சம்புலிங்கத்தின் பஞ்ச்
            சமத்து சம்புலிங்கத்துக்கு க.ச.மு.ச. கட்சியிலிருந்து தலைவர் பதவி தேடி வந்தது.
            தலைவர் பதவியை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொண்டார் சம்புலிங்கம்.
            அவர் பதவியேற்ற பத்தாம் நாளே ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
            சம்புலிங்கம் துவண்டு போனார்.
            பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணம் புரளாத இந்த நேரத்தில் எப்படி கூட்டத்தைக் கூட்டுவது என்று முழி பிதுங்கியது. சம்புலிங்கம் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஆவேசமாக எழுந்து சென்றார். நின்றார். பிறகு, பேசினார், "இது நானா சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்!"
            அவர் சென்று, நின்று, பேசிய இடம் ஏ.டி.எம். வாயில். செம கூட்டம்!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...