30 Nov 2016

வளைய வரும் திருடர்கள்


வளைய வரும் திருடர்கள்
மிக எளிதாக
ஒரு போலீஸ் கதையை
எழுதி விட முடிகிறது!
திருடன் கதைதான்
சிக்கலாக இருக்கிறது
பரபர திருப்பங்களோடு
எந்தப் புள்ளியில்
திருடனாக மாறினான்
அந்தக் காவலன் என்று!
*****

பிரிவு எனும் பெருவலி
நீ விரும்புவாய் எனத் தெரியும்!
அதனால்தான் என்னவோ காத்திருந்தேன்.
அநேகமாக நாம் சந்தித்ததே போதும் என்று
நினைத்ததோ என்னவோ,
நீயும் நானும் இணையும் புள்ளியில்
எப்படியோ உன்னைத் தூக்கிச் சென்று விட்ட மரணம்!
அதன் பின் நம்பிக்கை ஒன்றில்
மிஞ்சியிருக்கும் மனது காத்திருக்கிறது
பிசாசாய் நீ வரும் பொழுதிற்காய் தினம் தினம்!
*****

நாள்களின் பின்னே...
ஒரு ஞாயிற்றுக் கிழமை போதும்
நம் காதலைப் புதுப்பித்துக் கொள்ள!
மீதி ஆறு நாள்கள் வேண்டியதாக இருக்கிறது
நம் காதலைப் பழையதாக்கிக் கொள்ள!
*****

முகமூடி
ஒவ்வொரு வெற்றியின் போதும்
முகமூடி மாட்டிக் கொள்பவன்
கிழித்து எறிந்து விடுகிறான்
ஒவ்வொரு தோல்வியின் போதும்!
அழவும், கண்ணீர் சிந்தவும்
எப்போதும் உகந்ததாக இருக்கிறது
சொந்த முகம்!
கழட்டி விட்டான்  என தெரிந்த பின்
எப்படியோ ஒரு வெற்றி வந்து சேர்கிறது
மீண்டும் முகமூடியை மாட்டிக் கொள்ள!
*****

வாசகம்
மணல் லாரி
சுமந்து செல்லும் வாசகம்
"மண்வளம் காப்போம்!"
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...