30 Nov 2016

ஏலியன்


சகிப்புத்தன்மை
"நாட்டுல சகிப்புத் தன்மையே யாருக்கும் இல்ல!" வந்த கோபத்தில் நியூஸ் பேப்பரை கசக்கித் தூக்கி எறிந்தார் சாந்தமூர்த்தி.
*****
தலைவன் இருக்கிறான்!
"அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கலந்து ஆலோசித்தப் பிறகே, இந்த ஊழல் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்படும்!" என்றார் தலைவர்.
*****
ஏலியன்
"அதோ ஏலியன்!" என்றார் செவ்வாய் கிரகத்திற்கு ஏலியனாய் சென்று இறங்கிய சுந்தர் சுப்புராமன்.
*****
பலி
மர்ம காய்ச்சலுக்குப் பலியானான் தூக்குத் தண்டனை கைதி துலுக்கானம்.
*****
சரண்டர்
மனைவி இறந்த மறுநாளே தனக்கான பாலிஸியை சரண்டர் செய்யுமாறு இன்ஷ்யூரன்ஸ் ஆபிஸில் நின்றார் இராமநாதன்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...