30 Mar 2024

கவிதைக்காரனின் குறிப்புகள்

கவிதைக்காரனின் குறிப்புகள்

அவன் வீட்டுக் கட்டில் மரம்

ஜன்னல்கள் கதவுகள் மரம்

நாற்காலிகள் மரம்

பிளாஸ்டிக் ஏதுமில்லை

பீரோக்கள் மரம்

இரும்பில் ஏதுமில்லை

மேசைகள் மரம்

அலமாரிகள் மரம்

மரந்தான் எல்லாம் மரந்தான்

மறந்தான் மறந்தான்

எல்லாம் மரம் என்பதை மறந்தான்

சுற்றி நின்ற எட்டு மரங்களை வெட்டிதான்

இந்த வீட்டைக் கட்டினான்

பக்கத்திலிருந்த அத்தனை மரங்களையும் வெட்டி விட்டுதான்

ப்ளாட் போட்டான்

அதிலிரண்டில் வாடகை வீடும்

ஒரு தங்கும் விடுதியும் கட்டி விட்டான்

காற்றடித்தால் முறிந்து விழுகிறது

புயலடித்தால் வேரோடு விழுகிறது என்று

சாலையில் இருந்த இரண்டு மரங்களையும்

திராவகம் ஊற்றித் தீய்த்தான்

மரங்களை வெட்டித் தயாரிக்கப்பட்ட மரக்கூழில்

தயார் செய்யப்பட்ட தாளில்

மரங்களின் மகத்துவம் குறித்த கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறான்

அதை பிடிஎப்பாகப் போடாமல்

தாள்களில் அச்சடித்துக் கவிதைப் புத்தமாக

விநியோகித்துக் கொண்டிருக்கிறான்

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...