18 May 2023

முளைத்தெழுந்த அரிசிக் கடைகள்

முளைத்தெழுந்த அரிசிக் கடைகள்

இந்த வயல்களை அழிக்க

வங்கிகளில் கடன் வாங்கினேன்

வீட்டுமனை போட்டவருக்கு

மாதாந்திர தவணைத் தொகை செலுத்தினேன்

மனையாளின் நகைகளை அடகு வைத்தேன்

கடனைக் கட்டி முடிப்பதற்குள்

நாயாய் பேயாய்க் கொசுவாய் அலைந்தேன்

புதுமனை புகு விழா கண்ட போது

நெல் உற்பத்தி குறைந்திருக்குமோ

அரிசிப் பஞ்சம் வந்து  விடுமோ என

மனசாட்சி உறுத்தியதற்கு மாறாக

புறநகர் முனையில்

ஐந்தாறு அரிசிக் கடைகள் முளைத்திருந்தன

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...