26 May 2021

கொரோனா தேவியைக் கும்பிடுதல்

பல்லியின் பலன்

பல்லி விழும் பலன் தெரியுமாடா

என்றார் பெரியப்பா

மேலே விழும் பல்லியைப்

பிடித்து அப்படியே சாப்பிட்டிடுவேன்

என்றான் அப்புக்குட்டி

*****

பாசக்கார மக்கள்

மக்களாம் மக்கள்

பாசக்கார மக்கள்

கொரோனாவால்

ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருக்கும்

பிரசிடென்டை

ஊர் கூடிப் போய்க்

கூட்டமாய்ப் பார்த்து வரும்

பாசக்கார மக்கள்

*****

கொரோனாவின் பதில்

கொரோனாவைப் பார்த்து

கவிஞர்கள் எல்லாம்

கொரோனா கொரோனா கொல்லாதே

என்கிறார்கள்

நீங்கள்தான் கொல்கிறீர்கள்

தடுப்பூசிப் போட்டு

என்கிறது கொரோனா

***

செய்கைகள்

கடவுளைச் செய்கிறார்கள்

மக்கள்

கொரோனா தேவி பொம்மை கேட்கிறாள்

மகள்

***

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...