21 Nov 2018

கஜா புயல் - சீர் செய்யப்பட வேண்டிய மூன்று


கஜா புயல் - சீர் செய்யப்பட வேண்டிய மூன்று
            கஜா புயலால் அதிக அளவு பாதிப்புக்குள்ளானவை,
                        1. போக்குவரத்து,
                        2. மின்சாரம்,
                        3. தகவல் தொடர்பு.
            கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான போக்குவரத்தைச் சரி செய்வதில் பொது மக்களின் முன்னெடுப்பும், உழைப்பும் அபாரமானவை. தாங்களாகவே முன்வந்து சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றுவதில் முனைப்பாக ஈடுபட்டனர். வெகுவிரைவாகப் போக்குவரத்துச் சீராவதில் அவர்கள் கொடுத்த உழைப்பு அதிகம்.
            மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட பாதிப்புகளை மின்சார வாரியமும், தகவல் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே சரி செய்ய முடியும்.
            மின்சார வசதி எவ்வளவு விரைவாகச் சீர் செய்யப்படுகிறதோ அவ்வளவு விரைவாக மக்களின் குடிநீர்த் தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளும், இரவில் தேவையாக இருக்கும் வெளிச்சம் போன்ற அத்தியாவசியத் தேவைகளும், அலைபேசித் தொடர்பு போன்ற தகவல் தொடர்பு தேவைகளும் சீராகும்.
            தகவல் தொடர்பு சீராவது மின்சார வசதி சீராவதன் கைகளில் இருக்கிறது. அதனால் மின்சார வசதியைச் சீர் செய்வது என்பது மின்னல் வேகத்தில் சீர் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...