27 Oct 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 9


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 9
            செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சி ஆகும். பள்ளி வயதிலேயே மாணவர்களின் மனதில் பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுவது அறிவுத் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். அதற்காக மாணவர்களை நோக்கிப் புத்தகக் கண்காட்சியைக் கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு அறிவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
            இதுவரை எட்டு அறிவுத் திருவிழாக்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஒன்பதாவது அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், திருநாட்டியத்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25.10.2018 (வியாழன்) அன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது.
            திருநாட்டியத்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கிராமப்புறப் பள்ளியாகும். அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சியை எதிர்பார்த்து காத்திருந்ததும், ஆவலோடு புத்தகங்களைப் பார்வையிட்டதும் அறிவுத் திருவிழாவின் நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்தது. புத்தகக் கண்காட்சி தொடங்கியதிலிருந்து நிறைவு பெறும் வரை அவர்கள் வெளிப்படுத்திய அமைதியும் ஒழுங்கும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
            ஒரு லட்சம் புத்தகங்களை சிறார்களின் கையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட செங்காந்தள் அறிவுத் திருவிழா எட்டு அறிவுத் திருவிழாக்கள் வரை கொண்டு சேர்த்த புத்தகங்கள் போக இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகங்கள் 97,481 ஆகும்.
            ஒன்பதாவதாக நடைபெற்ற இவ்வறிவுத் திருவிழாவில் 43 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம். அது போக பள்ளிகளில், பொது இடங்களில் நடைபெற்ற விழாக்களுக்காக புத்தக ஆர்வலர்கள் வாங்கிச் சென்ற புத்தகங்கள் 92 ஆகும். ஆக 43+92=135 புத்தகங்களைக் கொண்டு சேர்த்து உள்ளோம்.
            ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற இலக்கை அடைய நாம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகங்கள் 97,481-135=97,346 ஆகும். 97,376 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! புத்தகங்களால் ஆன புத்துலகை வார்ப்போம்!
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...