28 Oct 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10
            செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களை நோக்கிய புத்தகக் கண்காட்சியாகும்.
            புத்தகக் கண்காட்சிக்காக மாணவர்களை அழைத்துச் செல்வதை மாற்றி, மாணவர்களை நோக்கி புத்தகக் கண்காட்சியை அழைத்துச் செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அறிவுத் திருவிழாக்கள் பள்ளிகள் தோறும் நடத்தப்படுகின்றன.
            இதுவரை ஒன்பது அறிவுத் திருவிழாக்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் பத்தாவது அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 26.10.2018 (வெள்ளி) அன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது.
            உச்சிவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறும் இவ்வறிவுத் திருவிழா அப்பள்ளியில் நடைபெறும் இரண்டாவது முறையாக நடைபெறும் அறிவுத் திருவிழா ஆகும்.
            செங்காந்தளின் இரண்டாவது அறிவுத் திருவிழா நடைபெற்றதும், ஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக அறிவுத் திருவிழா நடைபெறுவதும் உச்சிவாடிப் பள்ளியில்தான் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.
            ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்கள் பள்ளியில் அறிவுத் திருவிழா நடத்த வேண்டும் என்ற அப்பள்ளியின் அன்பான ஆணைக்கிணங்க பத்தாவது அறிவுத் திருவிழா உச்சிவாடிப் பள்ளியில் நடைபெற்றது.
            அறிவுத் திருவிழாவின் எண்ணிக்கை பத்து என்ற இரட்டை இலக்க எண்ணிக்கையை தொட்டு நடைபெற்ற இவ்வறிவுத் திருவிழாவில் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று புத்தகங்களை அள்ளிச் சென்றனர்.
            பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வறிவுத் திருவிழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும்.
            பத்தாவதாக நடைபெற்ற அறிவுத் திருவிழாவின் மூலம் 97 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம்.
            அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தகங்களை சிறார்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்கு 97,346 ஆகும்.
            பத்தாவது அறிவுத் திருவிழாவில் நாம் கொண்டு சேர்த்த 97 போக, அதாவது 97,346-97= 97,249 புத்தகங்கள் நாம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்காகும். 97,249 புத்தகங்களைக் கொண்டு சேர்க்க அணி சேர்வோம்! நற்பணி செய்வோம்!
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...