29 Aug 2018

பாக்கியவான்களாக நாட்கள் ஆகும்!


பாக்கியவான்களாக நாட்கள் ஆகும்!
யாரைச் சந்தேகப்பட்டால்
எதுவும் சொல்ல மாட்டாரோ
அவரைச் சந்தேகப்பட வேண்டும்
அவர் அதற்காக கோபிக்க மாட்டார்
அடிக்க முயற்சிகள் மேற்கொள்ள மாட்டார்
அடிக்கடி சந்தேகம் கொள்வதால்
சலிப்புக் கொள்ளவும் மாட்டார்
சந்தேகத்திற்கிடமான நபர்
தப்பித்து விட்டது குறித்து
கவலைப் படவும் மாடடார்
சந்தேகப்பட்டதைச் சந்தேகமாகவேனும்
பார்க்கத் தெரியாதவர்கள்
பாக்கியவான்கள் என
நாம் புரிந்து கொள்ள நாட்கள் ஆகும்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...