28 Aug 2018

எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்!


எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்!
சந்தோசமானது எது குறித்தும்
பகிர்ந்து கொள்ளக் கூடாது
உடன் அது பிடுங்கப்படும்
கவலையானது எது குறித்தும்
அறிகுறி காட்டி விடக் கூடாது
உடன் அது பரப்பப்படும்
எப்போதும் நடுநிலையோடு இருப்பது நல்லது
அதுவும் சுத்த சாம்பார்த்தனம்
என விமர்சிக்கப்படும்
எப்படி இருப்பது என்ற
குழப்பம் மட்டும் இருந்து விடக் கூடாது
எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...