27 Aug 2018

நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள்!


நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள்!
எல்லாரும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு
குறி பார்க்கும் போது
நீ மட்டும் ஏன் பறவைகளை ரசிக்கிறாய்?
விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை
ரசனைக்கானதாய்ச் சொல்லி
பறிக்க விடாமல் ஏன் மறுதலிக்கிறாய்?
நீ நதியோட்டத்தை ஆவல் தீர
கண்களால் பருக வேண்டும் என்பதற்காக
கரைகளை மறித்து
ஏன் எதுவும் செய்யக் கூடாதென்கிறாய்?
உனக்கு இயற்கைப் பிடிக்கும் என்றால்
காசு கொடுத்து ரசி
கூறு போட்டு காசு பார்ப்பவர்களிடம்
எதுவும் பேசாதே
நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள் நாங்கள்!
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...