25 Nov 2017

வியர்வையின் இனிப்பு

வியர்வையின் இனிப்பு
மாமனாரின் சுகருக்கு நாவல் பொடி
மாமியாரின் மூட்டுவலிக்கு தைலம்
கொழுந்தியாளுக்கு வத்தல் வடகம்
கணவனுக்கு கண் எரிச்சல் தீர அகத்திக் கீரை
கையிலிருக்கும் குழந்தைக்கு குச்சி மிட்டாய்
தனக்கென ஒரு முழம் மல்லிப்பூ
வாங்கிக் கொள்கையில்
நெற்றியில் வழியும் வியர்வை
இதழ்களில் பட்டு
இனிக்கிறது அவளுக்கு தாம்பத்யம்.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...