28 Nov 2017

வெயில் கண்களிலிருந்து கொட்டும் மழை

வெயில் கண்களிலிருந்து கொட்டும் மழை
மரத்தை எரிப்பது போல்
வெயில் அடிக்கிறது.
சிரித்துக் கொண்டு
நீர்மோர் கொடுப்பது போல்
நீராவியை
அனுப்பிக் கொண்டிருக்கிறது
மரம்.
முடியாத போது
இலைகளை அவிழ்த்து விட்டு
நிர்வாணமாகும்
மரத்தைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
மேகத் துணியால்
கண் மூடிக் கொண்டு
வெயிலின் கண்களிலிருந்து
கொட்டுகிறது மழை.

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...