27 Sept 2017

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!
            நகர்ப்புறத்தில் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது கோழிப் பெட்டிகளின் நினைவு வருகிறது.
            2400 க்குப் போடப்பட்ட ப்ளாட்டுகள் எனும் வீட்டு மனைகள் 1800 க்குக் குறைந்து, அப்புறம் 1000 க்குச் சுருங்கி, பின் அதுவும் 600 க்கும் 400 க்கும் காய்ந்துப் இன்னும் நன்றாகக் காய்ந்து போன வற்றல் போல மேலும் சுருங்கிக் கொண்டு இருக்கிறது.
            நகர்ப்புறத்தின் ஒரு வீட்டிற்குச் சென்ற போது ஜன்னலைத் திறக்க வேண்டும் போலிருந்தது. வெகு சாதாரணமாக "கொஞ்சம் ஜன்னலைத்திறந்து விடுங்களேன். காற்று வரட்டும்!" என்று சொல்லி விட்டேன்.
            "அதுக்கு எதுக்கு ஜன்னலைத் திறக்கணும். பேனைப் போட்டால் காற்று வரப் போகிறது. ஜன்னலைத் திறந்தால் கொசுதான் வரும்!" என்று பதற்றமாகி விட்டார்கள் வீட்டுக்காரர்கள்.
            "டவுன்ல களவு, கொள்ளை எல்லாம் அதிகமாயிடுச்சு! அதனாலயும் பெரும்பாலும் ஜன்னலைத் திறக்கிறதில்ல. அதுவும் இல்லாமல் நீங்க ஜன்னலைத் திறந்தா பக்கத்து வீட்டு சுவர் தெரியும். இல்லேன்னா காம்பெளண்ட்தான் தெரியும்!" என்று கூடுதல் விளக்கத்தையும் தந்தார்கள்.
            அவர்கள் ஜன்னல் இல்லாமல் கூட வீடு கட்டியிருக்கலாம். வருங்காலத்தில் அதைத்தான் முயன்று பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...