30 Aug 2017

ஊடுருவியவன் சாவான்!

ஊடுருவியவன் சாவான்!
            "இந்தியா மீதான சீனாவின் ஊடுருவலைப் பொறுத்துக் கொள்ள முடியாது!" என்று சமத்து சம்புலிங்கத்திடம் வந்து அனைவரும் ஆதங்கப்பட்டனர்.
            "அது அவன் தலையெழுத்து! மண்ணாப் போகப் போறான்!" என்றார் சமத்து சம்புலிங்கம்.
            "நம்மல ஜெயிக்க முடியாதுதானே!" என்று கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.
            "சண்டை போட்டா ஜெயிச்சிடுவான். ஊடுருவுனா தோத்துடுவான்!" என்று சம்புலிங்கம் சொல்ல கூட்டம் ஆச்சரியத்தில் புருவங்களை வளைத்து நெளித்து, "என்ன சொல்றீங்கன்னு புரியலையே!" என்று குழம்பியது.
            சம்புலிங்கம் தெளிவுபடுத்தினார், "ஊடுருவுனும்னு நினைச்சு நுழைஞ்சான்னா அங்கங்க இருக்குற டேல்கேட்டுல பணத்தைக் கட்டி கட்டியே செத்து சுண்ணாம்பாயிடுவான்!"

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...