31 May 2017

கடவுளின் முடிவுகள்


கடவுளின் முடிவுகள்
நேசித்தவளின் முகத்தில்
ஆசிட் வீசியவனை என்ன சொல்வது?
ஆதாம்கள் கடித்த ஆப்பிளின் எச்சில் என்றா?
ஆப்பிள் மர நிழல்
பாதுகாப்பில்லை என்று
ஏவாள்கள் முடிவெடுத்த நிலையில்
அங்கே கண்காணிப்பு கேமிராக்களைப்
பொருத்துவதாக முடிவெடுத்தார் கடவுள்.
*****

அக்கறை பாஸ்! அக்கறை!
முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்த மகன்
தினம் தினம்
முதியோர்களைக் காக்கச் சொல்லி
ஸ்டேட்டஸ் போடுகிறான்
தன்னால் முடியாததை
இன்னொருவராவது செய்யட்டுமே
என்ற சமூக அக்கறையோடு!
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...