27 Feb 2017

புரியாக் கவிதை


ஞாபகம்
மழை வெள்ளம்
பார்க்கும் போதெல்லாம்
காணாமல் போன
ஏரி, குளங்களின்
ஞாபகத்தை வர வைத்து விடுகிறது
தேங்கி நிற்கும் நீர்!
*****

புரியாக் கவிதை
என்னமோ எதுவுமே புரியவில்லை
என்ற கவிதையில்
கவிஞனின் மரணம்
சொல்லப்பட்டிருந்தது.
அவன் மரணம் புரிந்து
வந்து சேர்வதற்குள்
ஈமச்சடங்கு முடிந்து
சடசடவென எரியும் நெருப்பில்
கவிதைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...