27 Feb 2017

உயிரின் பயணம்


உயிரின் பயணம்
பத்தாவது மாடியிலிருந்து விழுந்தவனுக்கு
ஆறாவது மாடியைக்
கடக்கும் போது
எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என
நம்பிக்கை இருந்தது.
மூன்றாவது மாடியைக்
கடந்த போது
பிழைத்துக் கொள்ளலாம் என்று
நம்பிக்கைப் பிறந்தது.
இரண்டாவது மாடியைக்
கடந்த போது
பயப்படாதே என்று சொல்லி
பயம் கொண்டது மனது.
தரையை அடைந்து
உடல் சிதறிய போது
வாழணும் என்ற ஆசை பிறக்க
பிரிந்துப் போனது உயிர்.
*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...