31 Jan 2017

மெரினா போராட்டம் - புதியப் பார்வைகள்


மெரினா போராட்டம் - புதியப் பார்வைகள்
            மெரினாவில் நடைபெற்ற போராட்டம் பல வகையில் சிறப்பான கூறுகளைக் கொண்டுள்ளது.
            ஆண்கள்,
            பெண்கள்,
            குழந்தைகள் என்று முத்தரப்பும் கலந்து கொண்ட முத்தான போராட்டம் இது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கூட கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. குழந்தைகள் எண்ணிக்கையோ மிக மிக சொற்பம். அதனாலேயே மெரினா போராட்டம் தனித்த கவனம் பெறுகிறது.
            தலைமை எனும் ஏகாதிபத்திய ஆளுமையை வெடிவைத்த தகர்த்திருக்கிறது இப்போராட்டம்.
            பொதுவாக போராட்டம் என்றால் அரசியல் என்பார்கள். இது அரசியல் இல்லாத முதல் போராட்டம். பண்பாடு இல்லாத அரசியலைச் சாடிய, பண்பாட்டோடு கூடிய போராட்டப் பண்பாட்டை இப்போராட்டம் மூலம் இளைய தலைமுறையினர் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
            பகல், இரவு என இடைவிடாது நீண்டப் போராட்டத்தில் கண்ணியத்தைக் காண முடிந்தது. ஆண்-பெண் என்ற அந்நியத்தைக் கூட காண முடியவில்லை.
            பிரெஞ்சுப் புரட்சி சுட்டிய சுதந்திரத்தை நோக்கிய, சமத்துவமான, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தியப் போராட்டம்.
            உணர்வு ரீதியான உண்மையான போராட்டம் உலகையே உலுக்கி எடுக்கும் என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி நிரூபித்தார்கள்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...