30 Oct 2016

நாயென்று..

வருத்தம்
பால் கொடுக்கும்
வருத்தம்
கள்ளிச் செடிக்கு!
*****

நாயென்று..
நாயென்று சொல்வதற்கு
நாய் இருக்கும் போது
மனிதன்
நாயென்று சொல்வது
மனிதர்களை!
*****

வெளிச்சம்
கண்களைக் கூசும்
வெளிச்சம்
எரிந்து கொண்டிருக்கிறார்
ஒருவர்
தீக்குளித்து!
*****

பாத்திரங்கள்
வித்தியாசமான பாத்திரங்கள்
வேண்டும்
எனும் நடிகைக்கு
வித்தியாசமான பாத்திரமாகவே
அமைகிறது
வாழ்க்கை!
*****

மனைகள்
விதைப்பார்கள் என்ற நம்பிக்கையில்
இருந்தது வயல்
விதைத்து விட்டுப் போனார்கள்
சிமெண்டையும் கம்பிகளையும்!
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...