29 Apr 2021

எதிரி மரணிக்கிறார்

எதிரி மரணிக்கிறார்

வெறுப்பது விவேகமாகாது

நீங்கள் வெறுப்பதை

உங்கள் எதிரி விரும்பிச் செய்வார்

ரோஷப்படுவது புத்திசாலித்தனமாகாது

நீங்கள் ரோஷப்படுவதை

உங்கள் எதிரி உங்களின் பலவீனமாக்குவார்

வெறுக்காமல் இருக்கும் போது

எதிரி சோர்ந்து போவார்

ரோஷம் காட்டாமல் இருக்கும் போது

எதிரி மரணித்து விடுகிறார்

*****

அதுவா அதுவேதான்

பணக்காரர்களோடு சமரசம் செய்து கொள்வதை

புத்திசாலிதனம் என்பீர்கள்

புத்திசாலிதனம் என்பது

ஏழைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது

ஆனால் புத்திசாலிதனம் என்பது

சமரசம் செய்து கொள்வது என்று அடித்துச் சொல்வீர்கள்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...