29 Sept 2018

குறை நாக்குகள்


குறை நாக்குகள்
காலத்தின் ஆகப் பெரும் சோம்பேறி
கவிதையோடு மட்டும் பேசுவான்
நினைத்தால் நாவல்கள் எழுதித் தள்ளுவான்
சிறுகதையோடு முடிந்துப் போவதும் உண்டு
வார்த்தைகளின் வசீகரத்தில்
மயங்கிப் போனக் கிறுக்கன்
பைத்தியமாய் அலைவதில் தனிசுகம்
உங்களுக்குப் பிடிக்காதுதான்
காசுக்காக ஏசுவையும் விற்ற நீங்கள் இருக்கும் போது
அப்படி ஒரு பிறவி இருந்து விட்டுப் போகட்டும்
குறை சொன்ன நாக்குகளைக் கடித்துத் துப்பிப் போடுங்கள்
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...