30 Apr 2017

யாங்காகியர் எனின்...


வாஞ்சை
மாடுகளுக்காக
மாடு போல் உழைத்த
அம்மாவின் கைகள்
வாஞ்சையோடு
தடவிப் பார்க்கிறது
பாக்கெட் பால் உறையை.
*****

யாங்காகியர் எனின்...
எம்.ஜி.ஆர். படம் பிடிக்கும் பெரியப்பா
ரேஷன் அரிசி கடத்துவதில் கில்லாடி என்பார்.
சிவாஜி படம் பிடிக்கும் சித்தப்பா
பாரின் போவதாகச் சொல்லி
அத்தையின் மொத்த சொத்தையும்
ஆட்டையைப் போட்ட சூராதி சூரர்.
அப்பாவுக்குப் பிடித்ததெல்லாம்
ஜெமினி கணேசன் எனினும்
வேறு ஒருத்தியைக் கடைக்கண் கொண்டு கூட
நோக்காமல் வாழ்ந்து முடித்தார்.
நாங்களோ
ரஜினி, கமல் என்று அடித்துக் கொள்ளாமல்
கடைசி வரை ஜெயமாலினியின் ரசிகர்களாக
ஒற்றுமையோடு இருந்தவர்களானோம்.
எமக்குப் பிறந்த பிள்ளைமார்களோ
புதுயுகத்தின் பிரதிநிதிகளாய்
வடிவேலு, சந்தானத்தின்
பித்தர்களாய் ஜமாய்த்துக் கொண்டிருப்பர் என்பதை
தியாகராஜ பாகவதரும் அறிந்திலரே.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...