30 Dec 2016

வரங்கள்


வாழ் இடம்
கோயில் வாழ்
யானைகள்!
தொட்டி வாழ்
மீன்கள்!
கூண்டு வாழ்
கிளிகள்!
முதியோல் இல்லம் வாழ்
பெற்றோர்கள்!
*****

வரங்கள்
‍அதிர்ஷ்ட கல்லோ
மந்திரத் தகடோ
தாயத்தோ
காப்பாற்றி விடாதோ என
கடைசி வரை நம்பி
காத்திருக்க வைக்கிறது மனசு!
பாவம்
அவைகள்
விற்பவர்களை
விட்டு விடாமல்
கடைசி வரை
வைக்கின்றன
தரித்திரத்தல்!
*****

இருக்கட்டும்
மேகங்கள் வரும்
குளங்கள்
இருக்க வேண்டும்!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...