27 Nov 2016

கரியும் நிலக்கரியும், தேனும் மீத்தேனும் சார்ந்த இடம் குறித்த கவிதைகள்


பெருந்தன்மை
கருப்பை வெளியே தள்ளியதை
அனாதையாக்காமல்
ஏற்றுக் கொள்ளும்
குப்பைத் தொட்டிகள்!
*****

கரியும் நிலக்கரியும், தேனும் மீத்தேனும் சார்ந்த இடம் குறித்த கவிதைகள்
நதியின் ஆன்மா
காணாமல் போன பின்
புலம்புவோம்
பாலைநிலத்திடம்!
*****
செவ்வாய் கிரக ஆராய்ச்சி போல
நதியோடி சுவடுகளை
வருங்கால வரலாற்றில் ‍தேடுவோம்!
*****
இங்கே நிலக்கரி எடுத்தார்கள்
அங்கே மீத்தேன் எடுத்தார்கள்
அதை விட ஆழமாய்
இங்கே நீர் எடுக்கிறார்கள்
என்போம் நிகழ்காலத்திடம்!
*****
மிதமிஞ்சி பொழிந்த போதெல்லாம்
அழிவு என்று சொல்லி
ஆழ்குழாய் போட்டு எடுக்கும் அந்நீரை
வளம் என சொல்லிச் சொல்லி மாய்வோம்!
*****
நிலக்கரியும், மீத்தேனும் எடுக்க வந்தவர்கள்
நமது நீரை நமக்கே இல்லாமல் ஆக்கி
நமது நீரை எடுத்து நமக்கு விற்பதை
காசு கொடுத்து வாங்கிப் பருகுவோம்!
*****
நிலக்கரியையும், மீத்தேனையும்
தோண்டித் தோண்டி தீர்த்த பின்
நமது நீரை சொட்டுச் சொட்டாய்
கண்ணீர் விட்டபடி
தேடிக் கொண்டிருப்போம் நாம்!
*****

ஓட்டம்
கட்டுமானத்தில் வாங்கிய
உயிர்ப்பலிகளை மறந்து விட்டு
உற்சாகமாக ஓடும்
மெட்ரோ ரயில்!
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...