17 Feb 2025

நெரிசல் பிராணிகள்

தண்ணீரில் வாழும் தாவரம்

நிரம்ப மழை பெய்து

நீர் தேங்கினால் அழுகி விடும் என்று

அழுது கொண்டே சொன்னாய்

நான் நீருக்குள் வாழும்

தாவரங்களை நினைத்துக் கொண்டேன்

*****

கருப்புக் கொடி

சூரியனுக்கு

ஒரு கருப்புக்கொடி

இந்த நிழல்

*****

நெரிசல் பிராணிகள்

கொட்டித் தீர்க்கிறது மழை

சுட்டெரிக்கிறது வெயில்

கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பயணம்

நெரிசல்களுடன் நிகழ்கின்றன

கடைவீதி அனுபவங்கள்

மனிதர்கள் பெருங்கூட்டத்தில்

நெருக்கி அடித்துக் கொண்டு வாழும் பிராணிகள்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...