கதை புனைந்தவரின் துர்பாக்கியம்
என்
கதையை யாரும் கேட்கவில்லை
எத்தனையோ
முறை முயற்சித்திருக்கிறேன்
கேட்போர்
யாருமில்லாமல் எப்படி சொல்வது
அவ்வளவு
அருமையான கதையை
விரும்பாதவர்களும்
இருப்பார்களா என்ன
நான்கு
சுவரிடம் மலையிடம் மரத்திடம்
கதைகளைச்
சொல்லியிருக்கிறேன்
பறவைகளிடம்
சொல்ல முயற்சித்த போது
அவை
பறந்து விட்டன
காற்றிடம்
சொல்ல முயற்சித்த போது
அது
நகர்ந்து விட்டது
புழுக்களிடம்
பூச்சிகளிடம் சொன்ன போது
அதி
வேகமாக கடந்து விட்டன
அசைய
முடியாதவை என் கதைகளைக் கேட்டதும்
நகரக்
கூடியவை என் கதையைக் கேட்காமல் விட்டதும்
தற்செயலாக
அன்றி காரண காரியங்களோடு நிகழ்ந்தன
நான்
என் கதையில் ஒரு தவறு செய்திருந்தேன்
மாபெரும்
தவறு செய்திருந்தேன்
தோல்விக்
கதையை வெற்றிக் கதையாக
மாற்றாமல்
விட்டிருந்தேன்
மாபெரும்
அந்த தவறு என் கதையை
யாரும்
கேட்க முடியாதபடி செய்து விட்டது
*****
No comments:
Post a Comment