22 Jan 2025

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

சம்பாதிக்கும் காலத்தில்

ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர்

ஐயா கடன் வேண்டுமா என்று

அலைபேசியில் அழைத்துக் கேட்க லட்சம் பேர்

மூன்று வட்டிக்கா ஐந்து வட்டிக்காக என்று

கடன் கொடுக்க கந்துவட்டிக்காரர்கள் கோடி பேர்

சம்பாத்தியம் போன வயதான காலத்தில்

கைமாற்று பத்து ரூபாய் கொடுக்க

யோசிக்கின்ற பக்கத்து வீட்டுக்காரர்

கணக்கெழுதிக் கொண்டு நூறு ரூபாய்க்கு

மளிகை சாமான்கள் கொடுக்க யோசிக்கும் கடைக்காரர்

அடுத்த வாரம் தந்துவிடுகிறேன் என்று சொன்னாலும்

தேநீர் கொடுக்க தயங்கும் தேநீர்க்காரர்

இருக்கும் வரை எல்லாம் இருக்கும்

இல்லாத போது எதுவும் இருக்காது

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...