27 Dec 2024

சனம் அண்டா மனம்!

சனம் அண்டா மனம்!

தன்னை இதுவரை கவனிக்காதவர்களை

ஒருவர்

காணாமல் போய் கவனிக்க வைத்து விடுகிறார்

இனி திரும்ப மாட்டார் என்ற எண்ணம்

இருக்கும் போது நன்றாகக் கவனித்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது

கடந்த காலத்தில் எடுத்திருக்க வேண்டிய முடிவை

நிகழ்காலத்தில் எடுத்து எந்தப் பயனுமில்லாமல் போகிறது

அன்பு கொடுப்பதைப் பற்றி யோசித்த போது

மனம் கஞ்சத் தனத்தைப் பற்றிக் கொண்டிருந்தது

உலகம் இப்போது எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்

தன்னுடைய பார்வையில்

தன்னைத் தான் எப்படி பார்ப்பது என்பதுதான் முக்கியம்

பலவீனமானவர்களிடம் நடந்து கொள்ளும் முறைதான்

மதிப்பீட்டுக்கு உகந்தது

கொடுப்பதால் குறைந்து போகப் போவதில்லை

எதையாவது கொடுக்கும் இடத்தில் இருக்க பிசுனாரித்தனம் அனுமதித்ததில்லை

கொடுப்பது பெருகும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்று

எத்தனையோ பேர் எத்தனை முறை சொன்னாலும்

பெற்றுக் கொள்ளும் இடத்தில் இருக்கவே பிரியப்படுகிறது

ஆளண்டா பட்சியாகி சனம் அண்டா கட்சியாகி விட்ட மனம்

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...