26 Dec 2024

கதை சொல்பவர்கள்!

கதை சொல்பவர்கள்!

என் மேல் எனக்கே நம்பிக்கையில்லை

அவர்கள் நம்பும் போது

எனக்கு வேறு வழியில்லை

செய்து தொலைக்க வேண்டியதாகி விட்டது

அது என்னவோ சாதனையாகியும் விட்டது

நம்பிக்கை இருந்தால் எதையும்

சாதிக்கலாம் என்ற வாசகமும் பிரபலமாகி விட்டது

எனக்கென்னவோ

இப்போது வரை நம்பிக்கையில்லை

ஆனாலும் சொல்கிறார்கள்

இன்னும் ஒரு நாள் காத்திரு

எல்லாம் மாறி விடும் என்கிறார்கள்

ஒரு நாள் காத்திருப்பது

கொடுமை என்றால்

கதையை முடித்துக் கொள் என்கிறார்கள்

அவர்களைப் பொருத்த வரை

அந்த நாளுக்கு அதுவும் ஒரு கதை

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...