10 Nov 2024

உன்னால் நீ வழிநடத்தப்படுவாய்!

உன்னால் நீ வழிநடத்தப்படுவாய்!

நான் யோசித்துக் கொண்டே போகிறேன்

ஒன்றும் அவசரமில்லை

எடுத்துக் கொள்ள காலம்

அள்ளிக் கொள்ள யோசனைகள்

பொறுமையாகப் போவதால்

பாதைக்கு வலிக்கப் போவதில்லை

நிதானமாக நடைபோடுவதால்

யாருக்கும் எந்த நட்டமுமில்லை

நான் எதை நாயகமாக நினைக்கிறேனோ

அதுவே என்னை வழிநடத்துகிறது

அது புன்முறுவல் பூத்து

மெதுவாகப் போகச் சொல்கிறது

அவசரப்படுவதால் ஆவது ஒன்றுமில்லை என்கிறது

அதிகபட்சமாக எதிரிகளால் செய்ய முடிவதெல்லாம்

மன உறுதியைக் குழைப்பதுதான் என்கிறது

மனஉறுதி குழையாத வரை

மனஉறுதி எனும் நாயகத்தால்

உன்னை அறியாமல் நீ

வழிநடத்தப்படுவாய் என்கிறது

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...