25 May 2024

நான் என்கிற ஒருவனும் நினைவு என்கிற நான்களும்

நான் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை

கடந்து போய் விடுகிறேன்

நினைவுகள் அதுவாக வருகின்றன

அதுவாக மறந்து போகின்றன

சில நேரங்களில் சிரிக்கின்றன

சில நேரங்களில் அழுகின்றன

சில நேரங்களில் மௌனமாகின்றன

சில நினைவுகளுக்குச் சுவடுகள் இருக்கின்றன

சில நினைவுகள் தடமிழந்து போகின்றன

எந்த நினைவுகளுக்கு எது எப்படி என்று

அந்த நினைவுகளுக்கும் தெரியாது

எனக்கும் தெரியாது

ஏதோ இருந்து கொண்டிருக்கின்றன நினைவுகள்

எப்படியோ இருந்து கொண்டிருக்கிறேன் நானும்

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...