24 May 2024

ஒரு துளி அன்பிற்கு ஓடி வரும் நாய்!

ஒரு பப்ஸைத் தின்ன துவங்கிய போது

எதிரில் வந்த நாயைப் பார்த்து

எழுந்த பயம்

அது ஓரமாய்க் கேவியபடி ஒதுங்கிய போது

பரிதாபமாய் மாறியது

பப்ஸில் கொஞ்சம் பிய்த்து போட்ட போது

அதன் கண்களில் தெரிந்த நன்றிக்கு முன்

கடல் ஒரு சிறு துளியாக

வண்டியைக் கிளப்பிக் கொண்டு போகும் போது

பின்னால் ஓடி வரும்

அது தேடும் ஆதரவுக்குப் பிய்த்துப் போட

அவசர வாழ்க்கையில் ஏதுமில்லை

***** 

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...