12 Oct 2023

வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள்

வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள்

வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். இப்போது நாம் பார்க்கப் போகும் இந்த மூன்று வழிகளும் ஆயிரம் வழிகளிலும் முக்கியமானது. வெற்றிக்கான ஆயிரம் வழிகளும் உங்களுக்கு முதல் வெற்றியை எப்படியோ பெற்றுத் தந்து விடும். வெற்றி என்பது ஒரு முறை வெற்றி பெறுவதில் மட்டுமில்லை, தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவதில் இருக்கிறது. தொடர் வெற்றியைப் பெறுவதற்கு இந்த மூன்று வழிமுறைகள் மட்டுமே உங்களுக்குத் தொடர்ந்து உதவக் கூடும்.

ஒரு காலத்தில் வெற்றி பெற்றோர் பின்னொரு காலத்தில் வெற்றி பெற முடியாமல் போகலாம். முதல் வெற்றிக்குப் பின் வெற்றியை ருசிக்க முடியாமல் சோர்ந்து போய்க் கிடப்பவர்கள் ஏராளம். வெற்றிக்கான இந்த மூன்று வழிகள் தெரியாதவர்கள் பெற்ற வெற்றியே போதுமானது என்று அமர்ந்து கொள்ள வேண்டியதுதான்.

இந்த மூன்று வழிகளில் ஒன்றைப் பயன்படுத்தி மற்ற இரண்டைப் புறக்கணித்து விட்டால் கூட உங்களது தொடர் வெற்றிக்கு எந்த விதமான உத்திரவாத்தையும் கொடுக்க முடியாது. இரண்டைப் பயன்படுத்தி ஒன்றைப் புறக்கணித்தாலும் அதே நிலைதான் ஏற்படும். மூன்றையும் ஒருங்கிணைந்து பயன்படுத்த வேண்டும். ஆகவேதான் வெற்றிக்கான ஒருங்கிணைந்த மூன்று வழிகள் என்று இவற்றைக் குறிப்பிடுகிறேன்.

அந்த மூன்று வழிகளையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து இந்த மூன்று வழிகளும் ஒருங்கிணைந்து எப்படி வெற்றியை உறுதி செய்கின்றன, தோல்வியை இல்லாமல் செய்கின்றன என்பதை விளக்குகிறேன்.

1)      தேவைக்கு அதிகமாக உழையுங்கள்.

2)      புத்திசாலித்தனமாக யோசியுங்கள்.

3)      வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்.

தேவைக்கதிமாக உழைப்பதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து உங்களுக்கு கோபம் ஏற்படும். அது கோபம் ஏற்பட வேண்டிய இடம்தான் என்றாலும் அந்தக் கோபம் உங்களுக்கு உபயோகமாக எதையும் செய்து விடாது.

நீங்கள் புத்திசாலித்தனமாக யோசித்து உங்கள் கோபத்தை உங்களுக்குப் பாதகமில்லாத அளவுக்குத் தடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் கோபத்தை உங்களுக்கு எதிராக எதிரிகளை உருவாக்கி விடாமலும் கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் அதிகப்படியான உழைப்பானது உங்களுக்குப் பயன்தரும்படி மாற்றிக் கொள்ள உங்களது புத்திசாலிதனமான யோசனைகள் உங்களுக்கு உதவ வேண்டும்.

முதலில் நீங்கள் ஏன் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாகத் தேவைக்கதிகமாக உழைக்கும் நீங்கள் ஏன் புத்திசாலித்தனமாக யோசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகப்படியாக உழைக்காமல் நீங்கள் கவனம் பெற முடியாது, அடுத்தடுத்த படிகளில் காலடி எடுத்து வைக்க முடியாது. அதிக உழைப்பு உங்களைக் கவனம் பெற்றுத் தருவதை உருவாக்குவதைப் போல உங்கள் உழைப்பை உறிஞ்சுபவர்களையும் உருவாக்கும். இவர்களே உங்கள் கோபத்தை உண்டாக்குபவர்களும், உங்களுக்கு எதிரிகளாக மாறப் போகிறவர்களும் ஆவார்கள். இவர்களிடம் கோபப்பட்டாலோ, இவர்களை எதிரிகளாக மாற்றிக் கொண்டாலோ இவர்களைச் சமாளிப்பதிலே உங்கள் ஆயுட்காலம் கரைந்து விடும். இவர்களைச் சாமர்த்தியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்குப் புத்திசாலித்தனமான யோசனைகள் உதவும். இந்த இடத்தில்தான் புத்திசாலித்தனமான யோசனைகள் உங்களுக்கு உதவுகிறது.

மூன்றாவதாக உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் நீங்கள் ஏன் பின்வாங்கி விடக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்த நீங்கள் தயங்கவே கூடாது. வாய்ப்புகள் எப்போதோ வருபவை. எப்போதும் வருபவை இல்லை. எப்போதோ வருவதைத் தயக்கத்தாலோ, அச்சத்தாலோ, தன்னம்பிக்கையின்மையாலோ, முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணத்தாலே தவிர்த்தால் அடுத்த வாய்ப்பு வருவதற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க நேரிடலாம். ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் போது இன்னொரு வாய்ப்பு தானாக வந்து சேரும். பயன்படுத்தாத போது வருங்காலத்தில் வரப் போகின்ற வாய்ப்பும் வராமல் போகும்.

நீங்கள் ஒரு வாய்ப்பைப் புறக்கணிப்பதால் வர வேண்டிய இன்னொரு வாய்ப்பின் வாயிலை அடைத்து விடுகிறீர்கள். ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தாத போது உங்களுக்கு ஒரு மடங்கு, இரு மடங்கு இழப்பு மட்டுமில்லை, அது பல மடங்கு இழப்பாகி விடுகிறது. ஒரு வாய்ப்பினால் இன்னொரு வாய்ப்பு, அந்த இன்னொரு வாய்ப்பினால் இன்னொரு வாய்ப்பு என்று போய்க் கொண்டிருந்தால் அவை பல மடங்கு வாய்ப்புகள்தானே.

இந்தக் காலத்தில் கடவுளர்கள் வந்து வரங்களைத் தருவதில்லை. வருகின்ற ஒரு வாய்ப்பே அடுத்தடுத்த வாய்ப்புகளை வரப்பிரசாதங்களாகத் தருகின்றன.

ஒரு வாய்ப்பு என்பது நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறிய வாய்ப்பாகவும் இருக்கலாம். அதற்காக அதைப் புறக்கணித்து விட வேண்டாம் அல்லது அலட்சியப்படுத்தி விட வேண்டாம். எந்தச் சிறிய வாய்ப்பில் எவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பது எதிர்காலத்திற்கு மட்டுமே தெரியும் என்பதால் எந்தச் சிறிய வாய்ப்பையும் எக்காரணம் கொண்டும் புறக்கணித்து விட வேண்டாம். ஒரு பெரிய வெற்றி எனும் பூட்டைத் திறக்கும் சிறிய சாவியாக அந்தச் சிறிய வாய்ப்பு இருக்கக் கூடும்.

இப்போது இந்த மூன்று வழிமுறைகளையும் உங்கள் மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிப் பாருங்கள். நீங்கள் இதுவரை அடைந்துள்ள வெற்றிகள் மற்றும் தோல்விகளில் இந்த மூன்று வழிமுறைகளையும் எந்த அளவுக்குப் பின்பற்றியிருக்கிறீர்கள், பின்பற்றாமல் போயிருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த ஒப்பீடு உங்கள் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணத்தைப் படிகம் போலக் கண்ணில் காட்டும்.

நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் இந்த மூன்று வழிமுறைகளையும் உங்களையறியாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதே போல தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த மூன்றையுமோ அல்லது இரண்டையோ அல்லது ஏதேனும் ஒன்றையோ பின்பற்றாமல் இருக்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மூன்று வழிமுறைகளையும் தன்னையறியாமல் பின்பற்றி வெற்றி காண்பவர்களும் இந்த மூன்று வழிமுறைகளையும் அறிந்து கொண்ட பின் வெற்றி பெறுவதைச் சாசுவதமாக ஆக்கி கொள்ளலாம். சொல்லியடித்து வெற்றியை நிலைநாட்டலாம். வெற்றி பெறுவதற்கெனவே பிறந்தவர் நீங்கள் என்று இந்த உலகிற்கு உரக்கச் சொல்லலாம். வெற்றி என்ற மூன்றெழுத்துக்கு இந்த மூன்று வழிமுறைகளும் அதன் மூன்று எழுத்துகளைப் போல.

ஆகவேதான் உங்கள் வெற்றியை உருவாக்குவதற்கு இந்த மூன்று வழிமுறைகளும் எப்போதும் உதவுபவையாக இருக்கின்றன. இதில் ஒன்று குறைந்தாலும் உங்கள் வெற்றிக்கான காலம் தாமதமாகும். இந்தமூன்றும் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதால் இந்த மூன்று வழிமுறைகளையும் எப்போதும் மனதில் வையுங்கள். இந்த மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி எந்தக் குறைவும் இல்லாமல் எல்லாவற்றிலும் வெற்றி அடையுங்கள்.

இந்த மூன்று வழிகளையும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் போது உங்களால் வெற்றியடையாமல் போக முடியாது. தோல்வியை அடைய வாய்ப்பே கிடையாது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...