27 Jan 2023

புத்தர் சரியாகத்தான் சொன்னார்

புத்தர் சரியாகத்தான் சொன்னார்

ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் போது

அதீத உழைப்பைக் கோருகிறது

உயிரையும் ரத்தத்தையும் ஒரே நேரத்தில்

உறிஞ்சும் பிசாசைப் போல நேரத்தை உறிஞ்சுகிறது

முதலில் அது ஒரு வியாபார தலத்தை உருவாக்கச் சொன்னது

பிறகு அதன் விளம்பரத்தில் நடிக்கச் சொன்னது

விளம்பர நடிப்பு சினிமாவை நோக்கி நெட்டித் தள்ளியது

சினிமாவும் முடிந்த பிறகு

அரசியல் என்கிறது முதல்வர் என்கிறது

ஒவ்வொரு ஆசை நிறைவேறும் போதும்

அடுத்த ஆசைக்குத் தயாராக வேண்டியிருக்கிறது

அது ஆணிகளின் கூர் முனையில் நிற்பதைப் போல

நெருப்புச் சுடரின் மேல் கட்டப்பட்டிருப்பதைப் போல

மிகு துன்பம் மிகு துயர் கொண்டதாக இருக்கிறது

புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...