30 Jan 2023

சாலைக்கு இடம் கொடுத்ததற்கான பரிகாரங்கள்

சாலைக்கு இடம் கொடுத்ததற்கான பரிகாரங்கள்

எங்கள் கிராமத்து நிலங்களைப் பிடுங்கித்தான்

எங்கள் கிராமத்து வீடுகளை இடித்துதான்

எங்கள் கிராமத்தில் நின்று செல்லாத

வாகனங்கள் செல்லும்

நான்கு வழி எட்டு வழிச் சாலைகளைப் போட்டார்கள்

தெரு தெருவாய் ஏன் வீடு வீடாய்

கிராமங்களில் நின்று சென்ற பேருந்துகளை எல்லாம்

இடைநில்லாப் பேருந்துகளாக்கினார்கள்

கிராமங்களில் நிறுத்தி வயிறார உண்டு சென்ற

லாரிக்காரர்களை எல்லாம் மோட்டல்களில் நிறுத்தச் செய்தார்கள்

பக்கத்துக் கிராமத்தில் பெண் கொடுத்தவர்களை

சுங்கச் சாவடியில் பணம் கட்டி விட்டுப் போய்

பார்த்து வரச் சொன்னார்கள்

ஊர் நிறுத்தத்தில் நிற்காத பேருந்துக்காக

நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று ஏறச் சொன்னார்கள்

இப்படித்தான் இப்படியேத்தான்

ஒரு சாலைக்கு இடம் கொடுத்த பாவத்திற்கு

புகையையும் தூசியையும் கக்கிச் செல்லும்

நகரத்திற்கு விரைந்து செல்லும் வாகனங்களை

அனுதினமும் வேடிக்கைப் பார்க்கும் பரிகாரத்தை

ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் செய்யச் சொல்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...