18 Jan 2023

கடலைக் குடித்த வானம்

கடலைக் குடித்த வானம்

இந்தக் கடல் உறிஞ்சிக் குடிப்பதற்கேற்றது

அதன் நீலம் மயக்கக் கூடியது

அலைகள் எச்சில் ஊற வைப்பவை

பூமிப் பாத்திரத்தில் ருசியான திரவம் போல

ஊற்றி வைக்கப்பட்டிருக்கும்

கடலைக் குடிக்க நினைப்பதற்குள்

ஒரு சிறுவன் ஓடி வந்து கை தட்டுகிறான்

ஒரு சிறுமி துள்ளிக் குதித்து ஆர்பரிக்கிறாள்

ஒரு காதலனும் காதலியும் பார்த்த மாத்திரத்தில் தழுவிக் கொள்கிறார்கள்

ஒரு முதியவர் தன்னை மறந்து பரவசம் ஆகிறார்

சோகம் சுமந்த வந்த ஒருவனும்

ஏக்கம் சுமந்து வந்த ஒருத்தியும்

எல்லாம் தொலைத்து ஏகாந்தத்தில் திளைக்கிறார்கள்

கடலைக் குடிக்கும் முடிவிலிருந்து

பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாது

அண்ணாந்து பார்க்கிறேன்

என்னை எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக் கொள் என்று

கடலைக் குடித்தது போலக் கடலின் பிரதியாய்

மேலே விரிகிறது வானம்

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...