29 Dec 2022

நீர் பேறு

நீர் பேறு

பிள்ளைவரம் இல்லாத ராஜா ஒருவன்

ஏரியொன்றை வெட்டி

பிள்ளை பேற்றைப் பெற்றுக் கொண்டான்

நீரால் நிரம்பிய ஏரியில்

மீன்கள் பெருகி முட்டையிட்டு

குஞ்சு குலுப்பான்களோடு குலவின

எண்ணற்ற பறவைகள் எங்கிருந்தோ வந்து

ஏகப்பட்ட குஞ்சுகளோடு திரும்பின

நரிகள் பாம்புகளும்

குறைவில்லாமல் குட்டிகள் பெற்றுக் கொண்டன

நிறைமாத நீரைப் பாய்ச்சி

நெல்மணிகள் கறிகாய்கள் பழ மரங்களோடு மல மரங்கள்

வம்ச விருத்தி செய்து கொண்டே போயின

பஞ்சம் தேடி பிழைக்க வந்த மனிதர்களும்

மீன்களோடு மீன்களாய் பறவைகளோடு பறவைகளாய்

உயிர்களோடு உயிர்களாய்

பிள்ளைகள் பெற்று மதாந்து நின்றனர்

யார் கண் பட்டதோ

நிறைசூலி ஏரியின் கரை மீது ஒரு சாலை வந்தது

சாலை வந்ததும் ஏரிக்குள்ளிருந்து

ஒரு பேருந்து நிலையம் முளைத்தது

முளைத்ததைச் சுற்றி களைச் செடிகள் அன்ன

வீட்டு மனைகள் வீரியமாகி

மனைகள் எங்கும் கட்டிடங்கள் முளைத்தன

மீன்கள் பரதேசம் போயின

பறவைகள் தூரதேசம் போயின

நரிகளும் வனவாசம் வாங்கின

பாம்புகள் சந்நியாசம் பெற்றன

நெல்மணிகளும் செடிகளும் பல மரங்களும்

எங்கிருந்தோ விளைந்து வந்தன

மனிதர்கள் மட்டும் எங்கிருந்தோ

வந்து வந்து போகின்றனர்

வந்து போகிறவர்களில்

வாடகைத் தாய்களும் இருக்கின்றனர்

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...