24 Nov 2022

பிள்ளைகள் படிக்கும் அழகு

பிள்ளைகள் படிக்கும் அழகு

இன்றைய பிள்ளைகள் பரீட்சைக்குப் படிக்கும் அழகே தனிதான்.

தொலைக்காட்சியைப் போட்டு விட்டுப் படிக்கிறார்கள்.

அலைபேசியைப் பார்த்துக் கொண்டே படிக்கிறார்கள்.

ஏதாவது தின்பண்டம் தின்று கொண்டே படிக்கிறார்கள்.

நம்மிடம் கதை பேசிக் கொண்டே படிக்கிறார்கள்.

அவர்கள் படிப்பதை நம்மிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே படிக்கிறார்கள்.

புலனத்தில் அழைத்துக் கொண்டே படிக்கிறார்கள்.

முகநூலில் குழு ஆரம்பித்து வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்.

கூகுள் மீட்டில் ஏற்பாடு செய்து கொண்டும் படிக்கிறார்கள்.

புத்தகமே இல்லாமல் பி.டி.எப்.பில் படிக்கிறார்கள்.

அப்புறம் என்ன செயலிகளில் வேறு படிக்கிறார்கள்.

நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தல் சத்தம் போட்டு மட்டும்தான் படித்தோம். அதற்கே ‘என்னடா படிக்கிறாய்? நல்லா ராகம் போட்டு படிடா மூதேவி!’ என்பார் தெக்குடு தாத்தா.

அவர் இன்றிருந்தால் இந்தப் பிள்ளைகள் படிப்பதைப் பார்த்து உயிரையே விட்டிருப்பார். அவர் அதிர்ஷ்டம் செய்தவர். நல்லவேளை அதற்கு முன்பே உயிரை விட்டு விட்டார்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...