29 Nov 2022

எழுத்தின் முதல் புரட்சி

எழுத்தின் முதல் புரட்சி

எனது மற்றொரு நண்பன் சுடுகுஞ்சு. முகநூலுக்காக ‘அமென்டா’ என்ற பெயரை வைத்துக் கொண்டான்.

ஏன்டா இப்படி? என்றேன்.

“ரங்கராஜன் ‘சுஜாதா’ என்று பெயர் வைத்துக் கொள்ளவில்லையா? சுரேஷ், பாலகிருஷ்ணன் என்று இரண்டு ஆண் எழுத்தாளர்கள் சேர்ந்து கொண்டு ‘சுபா’ என்று ஒரு பெண் பெயரை வைத்துக் கொள்ளவில்லையா?” என்கிறான்.

எழுத்தாளர் ஆகி விட்டால் இப்படி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்பால், பெண்பால் பெயர்களை மாற்றும் முதல் புரட்சியில்தான் எழுத்துத் துவங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இதில் பாரதி வித்தியாசமானவர். ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பாரதி என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறார். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாடியவர் அல்லவா!

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...