28 Oct 2022

தீபாவளியில் எது கஷ்டம்?

தீபாவளியில் எது கஷ்டம்?

தீபாவளிக்குப் பலகாரம் செய்வது?

தீபாவளிக்குத் துணிகள் எடுப்பது?

தீபாவளிக்கு வெடிகள் வாங்குவது?

இதில் எது கஷ்டம் என்கிறார்கள் தற்குறிகள்.

தீபாவளி வந்தால் ஊருக்குப் போய் விட்டு வர வேண்டும் என்பதுதான் கஷ்டமாக இருக்கிறது.

*****

கம்பர் இன்றிருந்தால்…

கம்பர் இன்றிருந்தால்

கடன் கொள்ளும் நண்பர் போல என்று எழுதியிருப்பார்.

*****

பாருக்குள்ளே நல்ல பாரு

பாருக்குள்ளே நல்ல பாரு

டாஸ்மாக் பாரு

என்று எழுதுவதற்குள் பாரதி இறந்து விட்டார்.

*****

ஞானத்தங்கமே! ஞானத்தங்கமே!

இருக்கும் இடத்தை விட்டு

இல்லாத இடம் தேடி அலைவார்

கல்யாணப் பந்தியிலே ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

உண்பர் அருகில் நின்றால்

அவர் எழுந்து சென்றதும்

இடம் கிடைக்குமே ஞானத்தங்கமே

பந்தியில் இடம் பிடிக்க

சிந்தித்துச் செயல்பட வேண்டுமடி ஞானத்தங்கமே

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...