4 Aug 2022

இந்தக் கவிதை எப்படி பிறக்கிறது என்றால்

இந்தக் கவிதை எப்படி பிறக்கிறது என்றால்

இந்தக் கவிதை திட்டவட்டமாக

எப்படியோ வருகிறது

அன்றொரு நாள் பூனை கடித்த போது

பிறிதொரு நாள் கொசு கடித்த போதும்

பாம்பு கடி என்றதால்

பயந்தோடி ஓடி விட்டதால்

நாய் துரத்திக் கொண்டோடிய ஒரு பொழுதில்

காக்கா கடி கடித்து

கமர்கட் கொடுத்த நாட்களில்

கரப்பான பூச்சி எட்டுக்கால் பூச்சி கடித்த

மூட்டைப் பூச்சி கடித்த

சொல்ல மறந்து விட்டேன் பார்

மூஞ்சூறு கடித்த நாளில் கூட

கவிதை கனன்று எழுந்திருக்கிறது

சொன்னால் நம்ப மாட்டாய்

ஸ்பைடர் கடித்து ஸ்பைடர் மேன் உருவாவது போல

கவிதை கடித்து கவிஞன் ஆகி

அந்தர வெளியில் சுந்தர பிரவாகத்தில்

பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது கவிதை

வேண்டுபவர்கள் பிடித்துக் கொள்ளலாம்

என்ன செய்வது

வேண்டாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...