31 May 2022

புதிய நீதிக் கதைகள் – பாகம் 13 லிருந்து எடுக்கப்பட்டது

புதிய நீதிக் கதைகள் – பாகம் 13 லிருந்து எடுக்கப்பட்டது

டீ எப்படி சொல்லுங்க.

நீ வெந்நீரைப் போட்டுக் கொடுத்தாலும் டீயைப் போலக் குடிப்பேன்.

வாவ் என்ன ஒரு கவிதை. நிஜமாவா சொல்றீங்க?

பின்ன பொய்யையா சொல்லுவாங்க?

ஏய் பொய் சொல்லக் கூடாது.

பொய் சொல்றதெல்லாம் சுட்டுப் போட்டா கூட வராது.

உண்மையைச் சொல்லுப்பா.

காட் பிராமிஸ் உண்மை.

பாத்தீயா? பிராங்கா சொல்ல மாட்டேங்ற.

ப்ளீஸ் நம்புப்பா.

நம்ப மாட்டேன். டெல் பேக்ட்.

பேக்டத்தான் சொல்றேன்.

எப்படி நம்புறது?

நம்பித்தான் ஆவணும்.

ஐயோ கொல்லாதப்பா.

நம்பிக்கைத்தாம் வாழ்க்கை எல்லாம். பிரபு சொல்வாரே.

யாருப்பா அந்தப் பிரபு?

அவுங்க அப்பா கூட அரிச்சந்திரா படத்துல நடிச்சிருக்காரே சிவாஜி.

சரியா புடிபட மாட்டேங்குதுப்பா.

கல்யாண் ஜீவல்லர்ஸ் நகைக்கடைக்கு வருவார்ல.

கல்யாண் ஜீவல்லர்ஸ் பிரபுன்னு சொல்லக் கூடாதா?

அவருதாம்பா. அவரேதாம்பா.

சரி எதாவது பேசி டைவர்ப் பண்ணாதே. வாட் பேக்ட்? ட்ரூ பேக்ட் அதைச் சொல்லு.

நீ போட்டுக் கொடுக்குற டீ அப்படித்தான இருக்கு.

எப்படி இருக்கு?

சாட்சாத் வெந்நீரைப் போல.

டேய் நெனைச்சேன்டா. நீ எதச் சுத்தி எப்படிச் சொல்ல வருவேன்னு.

என்னை நம்பு ப்ளீஸ்.

இனிமே டீன்னு வீட்டுப்பக்கம் வராதே. செருப்பால அடிப்பேன்.

வெந்நீர்ன்னு வந்தாலுமா?

செருப்பு பிய்ஞ்சிடும். மரியாதையா ஓடிடு.

பின்குறிப்பும் நீதியும் : அவரவர்களுக்குப் பிடித்தமான உண்மையை மட்டும் சொல்லவும். எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்று சட்ட ரீதியான கட்டாயம் எதுவுமில்லை.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...