23 Apr 2022

துக்கத்தின் ஒலிபரப்பு

துக்கத்தின் ஒலிபரப்பு

மரண வீட்டின் அழுகை

பாசத்தை ஒலிபரப்பும் என்கிறார்கள்

புலம்பல்கள் பிரிவின் வலி உணர்த்தும் என்கிறார்கள்

ஒரு காலத்தில் ஒன்றி வந்தது

இன்னொரு காலத்தில் இடறி விழுவது

சூத்திரங்களுக்குள் அடங்காத புதிர் கணக்கு

அந்திமக் காலத்தில்

ஒரு வாய் சோறு போட ஆளின்றி

ஒண்டிக் கொள்ள சிறு இடமின்றி

தடுமாறி விழுந்தால் கவனித்துத் தூக்க ஆளின்றி

செத்தது தெரியாமல்

ஆறு மணி நேரத்துக்கு அப்படியே கிடந்தார்

ரெட்டைத் தெரு சீயான்

கால வழுவிருப்பதை

சொல்பவர்கள் கவனமாக மறைத்துக் கொள்கிறார்கள்

மரணத்தின் மீளாப் பிரிவு

கடந்த காலக் கீறல்களை மறைத்து

நிகழ் காலத்துக்கான துக்கத்தை மட்டும் எழுதிக் கொள்கிறது

துக்கத்தை ஆற்ற முடியாதவர்கள்

சீயான் மீண்டு வந்து பிறப்பார் என்கிறார்கள்

மீண்டும் கவனிக்க ஆளின்றி

நாதியற்றுச் சாகவோ என்று கேட்காதா சீயானின் ஆத்மா

*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...