4 Apr 2022

எப்படி இருப்பது என்பதில் எந்தக் குழப்பமுமில்லை

எப்படி இருப்பது என்பதில் எந்தக் குழப்பமுமில்லை

நத்தையைப் போல மெல்ல நகர்வதா

நாயைப் போல விருட்டெனப் பாய்வதா

ஆமையைப் போல அமைதியாகச் செல்வதா

அணிலைப் போலத் துறுதுறுவென இருப்பதா

வாழ்க்கைக்குத் தேவை

வேகமும் விவேகமும் என்பாரும் உண்டு

அமைதியும் நிதானமும் என்பாரும் உண்டு

எப்படி இயங்குவது என்பதில்

எந்தக் குழப்பமும் எப்போதும் இருந்ததில்லை

தன்னுடைய வேகத்தில் சுழல்கிறது பூமி

தன்னுடைய அச்சில் சுழல்கின்றன

கிரகங்கள் ஒவ்வொன்றும்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேகம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயல்பு

யாரும் யாருடைய வேகத்தைப் பழிப்பதுமில்லை

எதுவும் எதனுடைய இயல்பைக் குறை கூறுவதுமில்லை

நத்தையின் இயல்பு மெதுவானது என்றால்

நாயின் இயல்பு வேகமாக இருந்து விட்டுப் போகட்டும்

உன்னுடைய இயல்பு என்னவோ

அப்படியே இருந்து விட்டுப் போகலாம் நீயும்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...