22 Feb 2022

நெறிமுறைகளின் தேசம்

நெறிமுறைகளின் தேசம்

விருந்தின் நிறைவில் ஒருவருக்கு உணவில்லாத போது

ஒட்டு மொத்த விருந்தின் வருத்தம் தெரியாத வண்ணம்

உணவில்லாத மனிதரை உதாசீனப்படுத்தும் படலம் தொடங்குகிறது

விருந்தின் நேர ஒழுங்கு விதந்தோதப்படுகிறது

விருந்தின் சட்ட திட்டங்கள் பெரிதாக்கப்பட்டு

மனித குறைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன

விருந்துக்கான நேம நிஷ்டைகள் உருவாகின்றன

விருந்திற்குத் தகுந்தாற் போல்

மனிதர்கள் பொருந்திக் கொள்ள வேண்டுமென்பது

ஏகமனதாக ஏற்கப்படுகிறது

பொருந்தாத மனிதர்களுக்குப் பட்டினி என்பது

பொருத்தமான தண்டனையென சாசுவதமாகிறது

விருந்துகள் தொடர்ந்து நடைபெறத் தொடங்குகின்றன

புசித்தவர்கள் புசித்த வண்ணம் இருக்கிறார்கள்

பசித்தவர்கள் பசியோடு இருக்கிறார்கள்

விருந்தின் சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு

யாவையும் ஏற்கப்படுகின்றன

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...